கன்னியாகுமரி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேகம்

திருமலை திருப்பதி கோயில் போன்ற அமைப்புள்ள கன்னியாகுமரியில் அமைந்துள்ள கோயிலில் மண்டலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. விவேகானந்தா கேந்திரம் வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து இன்றுடன் 48 நாட்கள் நிறைவடைவதையொட்டி யாகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை சுப்பிரபாத தரிசனமும், அதனைத்தொடர்ந்து யாகம், ஹோமம், பூர்ணாஹூதி ஆகியன நடைபெற்றது .பின்னர் சிறப்பு அபிஷேகத்துடன் சுவாமிக்கு வெள்ளி அங்கி சாற்றி அலங்கார பூஜை நடைபெற்றது.

Exit mobile version