தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு புறப்பட்ட மணக்குள விநாயகர் கோவில் யானை

தேக்கம்பட்டியில் நடந்து வரும், யானைகள் சிறப்பு முகாமிற்கு, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோவில் யானைகளுக்கான 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற புதுச்சேரி மணக்குளவிநாயகர் கோவில் யானை லட்சுமி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக யானை லட்சுமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Exit mobile version