ஜோசியகாரரை நம்பி இப்படி போய் செய்யலாமா…?

 

ஜோசியகாரர் கூறியதை நம்பி வீட்டின் உள்ளே 20 அடி ஆழம் பள்ளம் தோண்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை சோழவரம் பகுதியில் மோகன் என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் உள்ளே 20 அடியில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக பொது மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மோகனை கிராம நிர்வாக அலுவலர் விசாரித்த போது தனது தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியாவில்லை , இதனால் ஜோசியரை சந்தித்தாக கூறயுள்ளார். அந்த ஜோசியர் வீட்டின் உள்ளே 20 அடியில் ஒரு பள்ளம் தோண்டினால் புதையல் இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் மோகன் அதனை நம்பி இவ்வாறு செய்துள்ளார். இதையடுத்து, பள்ளத்தை உடனடியாக மூடவேண்டும் என்றும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது” என்றும் மோகனை வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இது குறித்து வருவாய் துறை சார்பில் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Exit mobile version