போலீஸின் மகளிடமே சில்மிஷம் – போக்ஸோவில் கைதான இளைஞர்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சினிமாவில் நடிகை ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவல் உதவி ஆய்வாளரின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறையில் பணியாற்றும் தம்பதி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தனர். அந்த புகாரில் தனது 17 வயது மகள் ஆன்லைன் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மதுரவாயலைச் சேர்ந்த சத்யபிரகாஷ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

சினிமா துறையில் இயக்குநராக இருந்து வருவதாகவும், எனது மகளை சினிமாவில் நடிகையாக நடிக்க வைக்கிறேன் என்று பல்வேறு ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார்.மேலும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், தன்னை மணக்கும் படி சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சத்திய பிரகாஷ் விளம்பரத்துறையில் உதவியாளராக பணிப்புரிந்து வருவதும் சினிமா துறையில் பணிப்புரிவதாக பொய் கூறியதும் தெரியவந்தது. மேலும், சீதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது ஏழு வயதில் குழந்தை இருப்பதாகவும், தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்ட சத்தியபிரகாஷை சிறையில் அடைத்தனர்.

 

 

Exit mobile version