கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது சிறுமி கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த கனகராஜ் – காஞ்சனா தம்பதியின் இரண்டரை வயது மகள் அம்ருதா. நேற்று அதிகாலை, வீட்டில் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் சிறுமி அம்ருதா கிடப்பதை கண்ட உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ரகுநாதன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version