பழமையான அம்மன் சிலையை விற்க முயன்ற நபர் கைது

5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான அம்மன் சிலையை விற்க முயன்ற நபரை கைது செய்திருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஏடிஜிபி அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் கங்கவல்லியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் தனது வீட்டில் பழமைவாய்ந்த அம்மன் சிலையை வைத்திருந்ததாகவும், அதனை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது என்று கூறினார். தகவலின் அடிப்படையில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான காவல்துறையினர், ராஜசேகரன் என்பவரை கைது செய்து உலோகத்தினால் ஆன ஒன்றேகால் அடி உயரமுள்ள அம்மன் சிலையை மீட்டதாக கூறினார். 

Exit mobile version