அண்ணன் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது!

கணவனுடன் பேசி சமாதனம் செய்வதாக பெண்ணை அழைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவனின் குடும்பத்தாரை போலீசார் தேடிவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மீனா. திருமணமாகி, விவாகரத்தான இவருக்கு 9 வயதில் மகன் உள்ளார். இதனிடையே நெல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் ரெட்டி என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீனிவாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி உள்ளார், ஆனால் மீனாவிடம் தான், பத்மாவதியிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், உன்னை திருமணம் செய்துகொண்டு மகனை பார்த்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மீனா, சீனிவாசனை 90 சவரன் நகை போட்டு பெற்றோர் முன்னிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சிறிது நாட்களில் வியாபாரத்திற்கு பணம் வேண்டும் என மீனாவிடம் இருந்து14 இலட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் சீனிவாசன் கேட்கும்போதெல்லாம் மீனாவும் நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுக்க ஆரம்பித்தார். இருப்பினும் சீனிவாசன் கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டில் தங்காமல், அடிக்கடி வெளியே செல்வதும், செல்போனில் பேசி கொண்டிருப்பதைக் கண்ட மீனா வெளியில் விசாரிக்கும் போது, சீனிவாசன் தன்னுடைய முதல் மனைவியான பத்மாவதியுடன் தான் இன்னும் வாழ்ந்து வருவதையும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதை பற்றி கேட்பதற்காக மீனா மாதவரதில் உள்ள சீனிவாசனின் தாயார் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியுள்ளார். அப்போது மீனா குளிப்பதை, மறைந்து இருந்து சீனிவாசனின் தம்பி கிஷோர் என்பவர் வீடியோ எடுத்து, நீ 10 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று மீனாவை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இது குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சீனிவாசனின் தம்பி கிஷோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சீனிவாசன் ரெட்டி, அவரது முதல் மனைவி பத்மாவதி, அம்மா சந்திரகலா ஆகியோரை தேடி வருகிறனர். கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து இது போன்ற மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

Exit mobile version