சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில், 12 வயது சிறுமி, பெற்றோரை இழந்து காப்பாளரின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார். ஆறாம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுமியை, மது அருந்திய சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version