சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு, ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கண்காணித்து வந்தனர். அப்போது, அந்த நபர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் இவ்வழக்கில் கன்னடபாளையம் ஜீவா பிரதான சாலையில் உள்ள ராமலிங்கம் என்பவரை கைது செய்தனர்.

Exit mobile version