தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற நபர் கைது

சென்னையில் உள்ள யானைகவுனியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த வேலு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட வேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Exit mobile version