மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் – 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகே, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, வடமாநிலத்தில் இருந்து பார்சல் சேவை லாரிகளில் குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென் மாவட்டங்கள் முழுவதும் குட்கா விநியோகம் செய்ததாகவும், கடத்தலுக்கு உதவியதாகவும், ஐந்து லாரி பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு மாசி, கீழ மாசி வீதிகளில் இயங்கிவந்த இந்த நிறுவனங்களுக்கு, மதுரை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்

Exit mobile version