மே 23 ஆம் தேதி மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்துவிடும்: பிரதமர் மோடி

தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியானதும் மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்துவிடும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேற்கு வங்க மாநிலம், ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் பதவிக்கு இனி அவரால் கனவு கூட காண முடியாது என்றும், டெல்லி அரசியலுக்கு செல்ல போவதாக மம்தா தெரிவிப்பது வெறும் சாக்கு போக்குதான் என்றும் அவர் கூறினார்.

மம்தாவின் உண்மையான நோக்கம், அவரது மருமகனை அரசியலில் பெரிய ஆளாக உயர்த்துவதுதான் என மோடி குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மக்களிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனப்போக்கு காணப்படுகிறது எனக் கூறிய மோடி, மம்தா பானர்ஜி அண்மைக்காலமாக பொறுமையிழந்து காணப்படுவதாகவும், தேர்தல் தோல்வியை அவர் உணர்ந்ததே இதற்கு காரணம் எனவும் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version