West Bengal shoot out: உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து மமதா பானர்ஜிஆறுதல்

மேற்கு வங்கத்தின் கூச்பெஹாரில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் மமதா பானர்ஜி சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த 10ம் தேதி நான்காவது கட்ட தேர்தலின்போது, கூச்பெஹாரில் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தினரை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தை குஜராத் மாநிலம் போல மாற்றும் முயற்சியை, ஒரு நாளும் அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறினார்.

5 பேரை சுட்டுக் கொன்றவர்கள் குறித்து புத்தகத்தின் வாயிலாக தெரியப்படுத்தப்படும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

Exit mobile version