News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தொடர்ந்து 3-வது நாளாக நீடித்த மம்தா போராட்டம் வாபஸ்

Web Team by Web Team
February 5, 2019
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
தொடர்ந்து 3-வது நாளாக நீடித்த மம்தா போராட்டம் வாபஸ்
Share on FacebookShare on Twitter

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, கைது செய்யாமல் விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக்கொண்டார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது, அவர்களை தடுத்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, மூன்று நாட்களாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டம் நடத்தி வந்தார்.

விசாரணைக்கு காவல் ஆணையர் ஒத்துழைக்காததை அடுத்து, சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, ராஜீவ் குமார், விசாரணைக்கு, சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், அவரை கைது செய்யாமல், விசாரணை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கொல்கத்தா மெட்ரோ ரயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் தர்ணா போராட்டத்தில், ராஜீவ் குமாரும் பங்கேற்றார். அவரின் இந்த செயல், இந்திய காவல்துறை விதிகளுக்கு எதிரானது என்று கூறி, ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, காவல் ஆணையருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், காவல் ஆணையரை கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு முன்னிலையில், தனது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும், தன்னுடைய போராட்டத்திற்கு ஆதரவளித்த பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: கொல்கத்தா காவல் ஆணையாளர்சிபிஐபோராட்டம் வாபஸ்மம்தா பானர்ஜிமேற்குவங்க முதலமைச்சர்
Previous Post

பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

Next Post

மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

Related Posts

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!
TopNews

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!

May 24, 2021
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி
TopNews

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி

May 3, 2021
West Bengal shoot out:  உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து  மமதா பானர்ஜிஆறுதல்
TopNews

West Bengal shoot out: உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து மமதா பானர்ஜிஆறுதல்

April 15, 2021
மேற்கு வங்க வாக்குப்பதிவு: வன்முறைகளைத் தாண்டி 80% மக்கள் வாக்களிப்பு
TopNews

மேற்கு வங்க வாக்குப்பதிவு: வன்முறைகளைத் தாண்டி 80% மக்கள் வாக்களிப்பு

April 1, 2021
சாத்தான்குளம்  – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்
TopNews

சாத்தான்குளம் – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

October 7, 2020
சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

October 1, 2020
Next Post
மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version