சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி

பாலாகோட் வான்வழி தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் புனியாத்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பல வருடங்களாக ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மமதா பானர்ஜி ஏழை, எழிய மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். பாலாகோட் வான்வழி தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்கும் மமதா பானர்ஜி, சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும் விளக்கம் அளிக்காதது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆட்சிக்கு, பாடம் கற்பிக்க மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

Exit mobile version