பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை நிராகரித்தார் மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தான் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், மேற்கு வங்கத்தில், அரசியலுக்காக 54 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பாஜக கூறுவதில் உண்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Exit mobile version