நீர் தேக்க தொட்டியில் ஆண் சடலம்!

விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவர், கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு, வரக்கூடிய குடிநீரில், துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்ததையடுத்து, மேல் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஊராட்சி பணியாளர்கள் சென்றனர். அப்போது நீர்தேக்க தொட்டிக்குள் அழுகிய நிலையில், ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு நடத்திய முதற்கட்ட விசாரணையில் , அந்த சடலம் சரவணகுமார் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் கடந்த 9 நாட்களாக நீர்த்தேக்க தொட்டியில் சடலம் கிடந்துள்ள நிலையில், அந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து, கிராம மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version