மலேசியாவில் சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெறுவதாக அறிவிப்பு

தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பக்கலை ஊக்குவிக்கும் வகையில் மலேசிய நாட்டில் உள்ள மலேசியா சிலம்பம் அகடாமி சார்பில் கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் 14,15ஆம் தேதி முதல் சர்வதேச சிலம்பும் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து அதன் குழு உறுப்பினர்கள் மதுரையில் பேட்டி அளித்தனர். சிலம்பம் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சிலம்பக்கலை வீரர்கள் பங்கேற்ப உள்ளதாகவும். தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பக் கலையை இளைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ளவும் அதனை கற்றுக்கொள்ளவும், இந்த வகையான போட்டிகள் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிலம்பக் கலை வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விழா குழு சார்பில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version