நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டுவரக்கூடாது என்பதில் உறுதி

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மத்திய சென்னை தொகுதி பா.ம.க நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பாலை ஆதரித்து, சென்னை சூளையில் அமைச்சர் ஜெயக்குமாரும், அன்புமணி ராமதாஸூம் வாக்கு சேகரித்தனர். திறந்தவெளி வேனில் அமைச்சர் ஜெயக்குமாரும், அன்புமணியும் வாக்குசேகரித்தபோது, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டுவரக்கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பேசிய பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சொத்துக்களை தங்கள் குடும்பத்தினர் அபகரித்தோம் என்று நிரூபிக்கமுடியவில்லையென்றால், ஸ்டாலின்… திமுக தலைவர் பதவியிலிருந்து விலகத்தயாரா? எனக்கேள்வி எழுப்பினார்.

Exit mobile version