கோவை மாவட்டம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் இடிகரையில் உள்ள மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவிலை புனரமைக்கும் பணி ஒரு வருட காலமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கணபதி ஹோமம், புற்று மண் எடுத்தல், முளைப்பாரி அழைத்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Exit mobile version