கதவணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் தொடக்கம்

நெருஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 30 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தண்ணீர் வரத்து குறையும் சமயத்தில் பராமரிப்பு பணிகள் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கதவணை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் முழுவதும் வடிகட்டப்பட்டு, பழுதடைந்த ஷட்டர்களுக்கு பதிலாக புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version