வாடிப்பட்டி – சோழவந்தான் ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி

வாடிப்பட்டி – சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி- சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து ஈரோடு செல்லும் திருநெல்வேலி பயணிகள் ரயில் இன்று விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது விருதுநகர் – ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் திருநெல்வேலி இணைப்பு ரயில், இன்று விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். விருதுநகர் -திருச்சி ரயில் நிலையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று 40 நிமிடங்கள் தாமதமாக, 3.40மணிக்கு திருச்சி சென்றடையும் என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

Exit mobile version