இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம்

இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேன தோல்வியடைந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியை கோத்தபய ராஜபக்சே தனது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு வழங்கியுள்ளார். இவர் இலங்கையின் இடைக்கால பிரதமராக செயல்படுவார் என்றும், நிதி அமைச்சர் பதவியும் கூடுதலாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 12 அமைச்சர் பதவிகளும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 03 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version