மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே காந்தியின் படத்திற்கும் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் ஏராளமானோர் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

Exit mobile version