மதுரை மத்தியச் சிறையை பார்வையிட்ட மகாராஷ்டிர சிறைத்துறைத் தலைவர்

தமிழகத்தில் சிறைத்துறையில் உள்ளது போன்ற வசதிகள் மும்பையில் இல்லை என மகாராஷ்டிரச் சிறைத்துறைத் தலைவர் தீபக் பாண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரச் சிறைத்துறைத் தலைவர் தீபக் பாண்டே மதுரை மத்தியச் சிறையின் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். கைதிகளால் நடத்தப்படும் உணவுக்கூடம், நாற்றங்கால் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிரச் சிறைத்துறையில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக, மதுரை மத்திய சிறையைப் பார்வையிட வந்ததாகத் தெரிவித்தார். தமிழக சிறைத்துறை சிறப்பாக உள்ளதாகவும், இங்குள்ளது போன்ற வசதிகள் மகாராஷ்டிராவில் இல்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் சிறைத்துறைக் கட்டடங்கள், சிறைத்துறை வசதிக் கழகத்திடம் உள்ளதாகவும், மகாராஷ்டிராவில் பொதுப்பணித்துறையிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version