மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ்: ஜிரி வெஸ்லி சாம்பியன்

மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி, பெலாரஸ் வீரர் இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7 க்கு 6, 5 க்கு 7, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் பெலாரஸின், இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.

தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2-வது சர்வதேச பட்டமாகும்.

Exit mobile version