இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க மஹா யாகம்

இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வேண்டி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் மஹா சாந்தி யாகம் நடைபெற்றது.

உகல நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும் இந்த மஹா சாந்தி யாகம் நடைபெற்றது. 25-ம் தேதி தொடங்கிய இந்த யாகம் வரும் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சிவாச்சாரியார் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் சாந்தி மஹா யாகம், பிரத்யங்கிராதேவி உருவச்சிலை முன்பு 9 யாக குண்டங்கள் அமைத்து , 9 சிவாச்சாரியார்கள் மூலமாக நூறு எழுத்து மந்திரம், சுமார் 10 ஆயிரம் முறை ஓமம் செய்யப்படுகிறது. அந்த மந்திரம் 50 நபர்களால் ஒரு லட்சம் முறை ஜபிக்கப்படுகிறது.

 

Exit mobile version