அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்

மகா சிவராத்திரியையொட்டி நாடு முழுவதும் சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

மேலும் மகா சிவராத்திரியையொட்டி லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version