ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்

நாடு முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவன் கோயில்களில் இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலய ஓட்டம் மற்றும் பக்தி பாடல்களை பாடி மகா சிவராத்திரி விழாவை சிறப்பித்தனர்.
இதேபோல் கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மகா சிவராத்திரியையொட்டி, தீபாராதனை, வழிபாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன

Exit mobile version