அரண்மனை விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை அருகே அரண்மனை விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது

புதுக்கோட்டையில் அரண்மனை விநாயகருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து ஆலயத்தை சிவச்சாரியர்கள் மூன்று முறை சுற்றி வந்து, கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா தீபாரதனைகள் காட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Exit mobile version