காசிபாளையத்தில் ஸ்ரீ முத்து வேலாயுதசாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில், மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுதசாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், காசிபாளையத்தில் கிபி 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மூன்று முக ஸ்ரீ முத்து வேலாயுதசாமி திருக்கோவிலில், முருக பெருமான் மூன்று முகங்களோடு அருள்பாலித்து வருகிறார். கடந்த எட்டு அண்டுகளாக கோவிலில், புதிய கருவறை, கோபுரம் என திருப்பணிகள் முடிவுற்று, கூனம்பட்டி ஆதினம் தலைமையில், மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version