மாயமான ஏ.என். 32 ரக விமானம் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 5லட்சம் அறிவிப்பு

மாயமான ஏ.என். 32 ரக விமானம் குறித்து தகவல் தருபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் ஒன்று கடந்த 3ம் தேதி 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. கிளம்பிய சில மணி நேரத்திலேயே அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானம் காணாமல் போய் ஒரு வாரம் காலம் ஆன நிலையில், சுகோய் 30ரக போர் விமானம் உள்ளிட்ட விமானங்கள் மூலம் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காணாமல் போன விமானம் குறித்து தகவல் தருபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று இந்திய வான்படை அறிவித்துள்ளது.

Exit mobile version