மதுராந்தகம் ஏரி, நீர் நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி, வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள் நிம்பி வருகின்றன. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பி வருகிறது. 23 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி, தற்போது 22 புள்ளி 4 அடியை எட்டி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓரிரு நாளில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீர் திறந்து விடப்படும் என்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுராந்தகம் ஏரியை பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version