மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,200 கோடி-ஒப்புதல் அளிக்கிறது மத்திய அமைச்சரவை

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் ஓருசில தினங்களில் மத்திய அமைச்சகம் 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து 2015 மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த ஜூன் மாதத்தில் மத்திய குழு ஒப்புதல் வழங்கியது.

இதன் அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் ஒரு சில தினங்களில் 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version