மதுரை செல்லும் தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் தரையிறக்கம்

டெல்லியிலிருந்து மதுரை செல்லும் தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 6 விமான ஊழியர்கள் உள்பட 123 பயணிகளுடன் வந்த தனியார் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 129 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version