பிரதமர் மோடியின் தேர்விற்கான கலந்துரையாடலில் பங்கேற்ற மதுரை மாணவி !

பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகள் மனஉளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனைகள் வழங்கினார். பல்வேறு மாநிலங்களிலிருந்து காணோலி வாயிலாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்தியாலயா பள்ளி மாணவி அஷ்வினியின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, மாணவர்கள் ஒரே லட்சியத்தில் இருக்க வேண்டும் என்றும், எண்ணத்தை அந்த லட்சியத்தில் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் கூறினார். அப்படி இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று மாணவர்களை பிரதமர் ஊக்கப்படுத்தினார்.

Exit mobile version