மதுரை சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாக மதுரை வடக்குத்தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை திருநகரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளைச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழைநீர் சேகரிப்பைச் செயல்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொது மக்கள் ஒன்று சேர்ந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version