மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில், அலங்காரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். இதனையடுத்து சிறப்பு பூஜைகளையடுத்து பக்தர்கள் ஏராளமானோர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தெப்பக்குளம் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கூட்டம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Exit mobile version