நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக மதுரை மருத்துவமனை டீன் விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனையின் டீன் வனிதா விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்தாக தகவல் வெளியானது. நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதில் மருத்துமனையில் உள்ள வெண்டிலேட்டர் இயங்காததால் நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் வனிதா, வெண்டிலேட்டர் இயங்காததால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை டீன் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version