தூத்துக்குடியில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன?

தூத்துக்குடியில், கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று விளக்கமளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றிற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கோரியவர்களின் விவரங்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட போராட்டங்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

Exit mobile version