மதுரை திருவிழா, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

மதுரையில், சித்திரைத் திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து, சிறப்பு டிஜிபி விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில், வருடம் தோறும் சித்திரைத் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம், தேரோட்ட நாளன்று, மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற உள்ளது. ஏற்கனவே, தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், வாக்களிக்கும் நேரம் மட்டுமே இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, சிறப்பு காவல்துறை தலைமை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் ராஜேஷ்வரன் மற்றும் 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version