செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தகோரி போராட்டம்- 710 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரையில், ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த கோரி கடந்த இரு தினங்களாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல், மதுரை சொக்கிகுளம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும், காமராஜர் பல்கலைகழக கல்லூரி, மதுரா கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 710 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சமூக வலைதளங்கள் மூலம் போரட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் கடுமையான சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக, தமுக்கம் மைதானம், செல்லூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version