மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில், சிறைத்துறை துணைத்தலைவர் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பெண் கைதிகள் உட்பட ஆயிரத்து 300 கைதிகளின் அறைகள் மற்றும் சமையல் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது. சொல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களோ, போதைப்பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என சிறை காவலர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version