மதுரை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மதுரை செக்கானூரணி அருகே, ஆ.கொக்குளம் என்ற கிராமத்தில், கடந்த ஐந்தாம் தேதி, கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது, இதில் செக்கானூரணி பகுதியை சேர்ந்த காசிநாதன்,அருண்குமார்,பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துபாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version