மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சந்நிதானமான அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்

உடல்நலக்குறைவால் காலமான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சந்நிதானமான அருணகிரிநாதரின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை ஆதினத்தின் பீடாதிபதி அருணகிரிநாதர், உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 13ம் தேதி இரவு காலமானார்.

அவரது உடல் மதுரை ஆதின மடத்திற்கு கொண்டுவரப்பட்டு, சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காமாட்சிபுர ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்களும், அதிகாரிகளும், பக்தர்களும், ஏராளமான பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், மதுரையின் நான்கு மாசி வீதிகளில் பூப்பல்லக்கில் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல், காமராஜர் சாலை வழியாக, ஆதீனத்துக்குச் சொந்தமான மீசாலை என்ற இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு சைவ முறைப்படி, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Exit mobile version