திருவாதவூர் கோயிலில் 6 லட்சம் மதிப்பில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் கோயிலுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உப கோவிலான இந்த கோவிலுக்கு, எதிர் வரக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது பக்தர்கள் முன்னிலையில் எழுந்து அருளக் கூடிய வகையில் தற்போது 4 வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன. சுமார் 6 லட்சம் மதிப்பிலான இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சிலையும் சுமார் 350 இல் இருந்து 400 கிலோ எடை கொண்டதாகும். ரிஷப வாகனம் சிம்ம வாகனம் யானை வாகனம் என மொத்தம் 4 வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Exit mobile version