"மதராசப்பட்டினம் விருந்து" என்ற பெயரில் உணவுத் திருவிழா

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து “மதராசப்பட்டினம் விருந்து” என்ற பெயரில் உணவு மற்றும் கலாச்சார திருவிழா சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது.

தீவுத்திடலில் நடைபெறும் உணவுத் திருவிழா, வருகிற 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உணவுத் திருவிழாவில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சரோஜா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா அமையும் என்றார். உணவு திருவிழாவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version