கொரேனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரேனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில், வயது வரம்பு பாராமல் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி மையங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கவும், அவர்கள் சென்றுவர வசதியாக சாய்தள வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Exit mobile version