நடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!ஏன்??

image

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.

நடிகர் விஜய், கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், சொகுசு காருக்கு வரி விதிக்க தடைவிதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்று நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் எந்த தொழில் செய்கிறார் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். அப்போது மனுதாரர், நடிகர் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.


புகழ் பெற்ற நடிகர்கள் முறையாக, வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் நீதிபதி குறிப்பிட்டார். வரி நன்கொடையல்ல, அது கட்டாய பங்களிப்பு என்று காட்டமாக தெரிவித்த நீதிபதி, சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.

நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுரை வழங்கினார். இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார்.

நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் நடிகர் விஜய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட செய்தியின் முழுவிவரங்களை தெரிந்துகொள்ள 

↕↕↕

Exit mobile version