மத்திய பிரதேச முதலமைச்சர் தங்கை மகன் ரதுல்புரி வங்கி கடன் மோசடி

மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் தங்கை மகனும், தொழிலதிபருமான ரதுல்புரி, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

தொழிலதிபரான ரதுல் புரி நடத்தி வரும், இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவன வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் புரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடந்து வருகிறது. ரதுல் புரி மீது ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கிலும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, 354 கோடி ரூபாய் அளவிலான வங்கி கடன் மோசடி வழக்கில், தொழிலதிபர் ரதுல் புரி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து நீதிமன்றத்தின் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Exit mobile version